என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீடு வீடாக காய்கறிகள் விற்கும் உழவர்சந்தை விவசாயிகள்
Byமாலை மலர்10 Jun 2021 10:00 AM GMT (Updated: 11 Jun 2021 2:43 AM GMT)
வீடு, வீடாக கொண்டு சென்று காய்கறி விற்பனை செய்வதால் இல்லத்தரசிகளின் மனநிலையை விவசாயிகள் நேரடியாக புரிந்து கொள்கின்றனர்.
திருப்பூர்:
கொரோனா தடுப்பு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தையில் இருந்து சரக்கு ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள் மூலம் காய்கறி எடுத்து சென்று விற்பனை செய்ய 865 பேருக்கு ‘பாஸ்’ வழங்கப்பட்டுள்ளது.இதில் 24 பேர் உழவர் சந்தைக்கு நேரடியாக காய்கறி கொண்டு வரும் விவசாயிகள்.
இந்தநிலையில் இவர்கள் வாகனம் மூலம் காய்கறி விற்பனையை தொடங்கியுள்ளனர். வாகனத்தில் மாநகராட்சியின் காய்கறி விற்கும் வாகனம் என்பதற்கு பதில் வேளாண் வணிகம் மற்றும் உழவர் நலத்துறை, உழவர் சந்தை நேரடி விற்பனை என்ற அறிவிப்பை வாகனங்களில் ஒட்டியுள்ளனர். இதுவரை உழவர் சந்தைக்கு மட்டுமே காய்கறி கொண்டு வந்து ஒரே இடத்தில் வைத்து விற்பனை செய்த விவசாயிகள் தற்போது வீடு, வீடாக கொண்டு சென்று காய்கறி விற்பனை செய்வதால் இல்லத்தரசிகளின் மனநிலையை நேரடியாக புரிந்து கொள்கின்றனர்.
தொற்று பரவல் உள்ளதால் உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வர விவசாயிகள் தயங்கும் நிலையில் மாநகராட்சியின் பாஸ் பெற்று விவசாயிகள் நேரடியாக களமிறங்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X