என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்திற்கு மேலும் 85,000 டோஸ் கோவாக்சின் மருந்துகள் வந்தன
Byமாலை மலர்10 Jun 2021 5:02 AM GMT (Updated: 10 Jun 2021 5:02 AM GMT)
மத்திய அரசு நேற்று 63 ஆயிரத்து 370 ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், இன்று 40 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசியும் அனுப்புவதாக உறுதி அளித்திருந்தது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நேற்று பெரும்பான்மையான இடங்களில் தடுப்பூசி போடப்படவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வத்துடன் வந்த பொதுமக்களும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
இந்நிலையில் தமிழகத்திற்கு இன்று மேலும் 85,000 டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் வந்துள்ளன.
மாநில அரசின் நேரடி கொள்முதலின்கீழ் மருந்துகள் பெறப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நேற்று பெரும்பான்மையான இடங்களில் தடுப்பூசி போடப்படவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வத்துடன் வந்த பொதுமக்களும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
தமிழகத்துக்கு இதுவரை 1 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரத்து 960 தடுப்பூசிகள்தான் வந்துள்ளன. நேற்று காலை நிலவரப்படி, 12 ஆயிரத்து 520 மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. அந்த தடுப்பூசிகள் அனைத்தும் நேற்று போடப்பட்டுவிட்டன.
இதையும் படியுங்கள்... தமிழகத்தில் தடுப்பூசி சுத்தமாக கையிருப்பில் இல்லை- சுகாதாரத்துறை செயலாளர்
ஏற்கனவே மத்திய அரசு நேற்று 63 ஆயிரத்து 370 ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், இன்று 40 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசியும் அனுப்புவதாக உறுதி அளித்திருந்தது.
தமிழகத்தில் தடுப்பூசி போடுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் தமிழக அரசால் சிறப்பாக செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் சூழ்நிலையிலும் தற்போது தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்ற நிலை இருந்தது.
மாநில அரசின் நேரடி கொள்முதலின்கீழ் மருந்துகள் பெறப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X