என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீக்கிரமே நல்லது நடக்கும்- முன்னாள் அமைச்சருடன் சசிகலா பேசும் ஆடியோவால் பரபரப்பு
Byமாலை மலர்10 Jun 2021 4:17 AM GMT (Updated: 10 Jun 2021 4:17 AM GMT)
அரசியலில் இருந்து விலகி போறேனு நீங்க சொன்னதுல இருந்து, நானும் அரசியலுக்கு முழுக்குபோட்டுவிட்டேன். அம்மாவுக்காகவும், இந்த கட்சிக்காகவும் நீங்க பட்ட கஷ்டங்களை எங்களால் மறக்கவே முடியாது.
சென்னை:
தொண்டர்களுடன், சசிகலா பேசும் ஆடியோ பதிவுகள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம், சசிகலா பேசும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-
சசிகலா:- ஹலோ... ஆனந்தன்.... நல்லா இருக்கீங்களா...
ஆனந்தன்:- நல்லா இருக்கேன்மா... நான் உளுந்தூர்பேட்டை ஆனந்தன்மா...
சசிகலா:- என்ன இப்படி சொல்றீங்க... உங்களை நல்லா ஞாபகம் இருக்கு.
ஆனந்தன்:- தாயில்லா பிள்ளையாக தவிச்சுகிட்டு இருக்கோம்மா...
ஆனந்தன்:- அரசியலில் இருந்து விலகி போறேனு நீங்க சொன்னதுல இருந்து, நானும் அரசியலுக்கு முழுக்குபோட்டுவிட்டேன். அம்மாவுக்காகவும், இந்த கட்சிக்காகவும் நீங்க பட்ட கஷ்டங்களை எங்களால் மறக்கவே முடியாது.
சசிகலா:- சரி.... சரி... பழைய ஆட்கள் எல்லோருக்குமே தெரியுமே...
ஆனந்தன்:- உங்களை கட்சிக்கு சம்பந்தமில்லாதவர் என மனசாட்சி இல்லாம பேசுறாங்களேம்மா... இந்த கட்சியை நீங்க காப்பாத்த வேண்டிய, தொண்டர்களை வழிநடத்த வேண்டிய கட்டாயம் இருக்கும்மா?
ஆனந்தன்:- அம்மாவுக்கு பிறகு நீங்கதான் எங்களுக்கு அம்மா. நீங்க வந்துதான் இந்த கட்சியை பழையபடி வளர்க்கனும்.
சசிகலா:- நிச்சயமா.... நிச்சயமா... நல்லா கொண்டு வந்துடலாம். தலைவர் காலத்துக்கு அப்புறம் அம்மா எப்படி கட்சியை வச்சிருந்தாங்க... எப்படி கட்சியை வளர்த்து கொண்டு வந்தாங்க... அதேவேலையை நாம் செய்வோம்.
ஆனந்தன்:- கட்சியை காப்பாத்த உங்களால்தான் முடியும்... எங்களை உங்க விசுவாசிகளாக ஏத்துக்கோங்க...
சசிகலா:- நிச்சயமா.... வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா?
ஆனந்தன்:- எல்லோரும் நல்லா இருக்காங்க.
சசிகலா:- கொரோனா வைரஸ் பாதிப்பு குறையட்டும். உங்களையெல்லாம் நேரில் சந்திக்கிறேன்.
ஆனந்தன்:- கட்சியில் எனக்கு ஆட்சிமன்றக்குழு உறுப்பினர், அமைப்பு செயலாளர் பதவிகளையெல்லாம் நீங்க வாங்கி கொடுத்தீங்க... அமைச்சராவும் ஆக்குனீங்க... காலத்துக்கும் உங்களுக்கு நன்றியோட இருப்பேன்...
இவ்வாறு அந்த உரையாடல் நடக்கிறது.
அதேபோல மேலும் சில தொண்டர்களிடமும், சசிகலா பேசும் ஆடியோக்கள் பரவி வருகிறது.
தொண்டர்களுடன், சசிகலா பேசும் ஆடியோ பதிவுகள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம், சசிகலா பேசும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-
சசிகலா:- ஹலோ... ஆனந்தன்.... நல்லா இருக்கீங்களா...
ஆனந்தன்:- நல்லா இருக்கேன்மா... நான் உளுந்தூர்பேட்டை ஆனந்தன்மா...
சசிகலா:- என்ன இப்படி சொல்றீங்க... உங்களை நல்லா ஞாபகம் இருக்கு.
ஆனந்தன்:- தாயில்லா பிள்ளையாக தவிச்சுகிட்டு இருக்கோம்மா...
சசிகலா:- ஒண்ணும் கவலைப்படாதீங்க.. சீக்கிரமே நல்லது நடக்கும்.
இதையும் படியுங்கள்...சாதி அரசியல் செய்வது ரொம்ப தவறு- தொண்டரிடம் பேசும் சசிகலா
ஆனந்தன்:- அரசியலில் இருந்து விலகி போறேனு நீங்க சொன்னதுல இருந்து, நானும் அரசியலுக்கு முழுக்குபோட்டுவிட்டேன். அம்மாவுக்காகவும், இந்த கட்சிக்காகவும் நீங்க பட்ட கஷ்டங்களை எங்களால் மறக்கவே முடியாது.
சசிகலா:- சரி.... சரி... பழைய ஆட்கள் எல்லோருக்குமே தெரியுமே...
ஆனந்தன்:- உங்களை கட்சிக்கு சம்பந்தமில்லாதவர் என மனசாட்சி இல்லாம பேசுறாங்களேம்மா... இந்த கட்சியை நீங்க காப்பாத்த வேண்டிய, தொண்டர்களை வழிநடத்த வேண்டிய கட்டாயம் இருக்கும்மா?
சசிகலா:- நிச்சயமா... அதான் நான் எல்லோர்கிட்டேயும் பேச ஆரம்பிச்சுட்டேன். நிறைய லெட்டர் வருது. தொண்டர்கள் மிகவும் மன குமுறலுடன் எழுதுறாங்க... அதெல்லாம் பார்த்துட்டுதான் என் மனசு ரொம்ப வருத்தமாயிடுச்சு. அதுக்குப்பிறகு தான் இப்போ பேச ஆரம்பிச்சுருக்கேன். கட்சி நம் கண் எதிரேயே இப்படி ஆகும்போது மிகவும் வருத்தமா இருக்கு. கட்சி இப்படியெல்லாம் போகுதே அப்படிங்குறப்போ, நான் நிச்சயம் தொண்டர்களுக்காக வருவேன்.
ஆனந்தன்:- அம்மாவுக்கு பிறகு நீங்கதான் எங்களுக்கு அம்மா. நீங்க வந்துதான் இந்த கட்சியை பழையபடி வளர்க்கனும்.
சசிகலா:- நிச்சயமா.... நிச்சயமா... நல்லா கொண்டு வந்துடலாம். தலைவர் காலத்துக்கு அப்புறம் அம்மா எப்படி கட்சியை வச்சிருந்தாங்க... எப்படி கட்சியை வளர்த்து கொண்டு வந்தாங்க... அதேவேலையை நாம் செய்வோம்.
ஆனந்தன்:- கட்சியை காப்பாத்த உங்களால்தான் முடியும்... எங்களை உங்க விசுவாசிகளாக ஏத்துக்கோங்க...
சசிகலா:- நிச்சயமா.... வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா?
ஆனந்தன்:- எல்லோரும் நல்லா இருக்காங்க.
சசிகலா:- கொரோனா வைரஸ் பாதிப்பு குறையட்டும். உங்களையெல்லாம் நேரில் சந்திக்கிறேன்.
ஆனந்தன்:- கட்சியில் எனக்கு ஆட்சிமன்றக்குழு உறுப்பினர், அமைப்பு செயலாளர் பதவிகளையெல்லாம் நீங்க வாங்கி கொடுத்தீங்க... அமைச்சராவும் ஆக்குனீங்க... காலத்துக்கும் உங்களுக்கு நன்றியோட இருப்பேன்...
இவ்வாறு அந்த உரையாடல் நடக்கிறது.
அதேபோல மேலும் சில தொண்டர்களிடமும், சசிகலா பேசும் ஆடியோக்கள் பரவி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X