என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி - புதிதாக 302 பேருக்கு தொற்று
Byமாலை மலர்10 Jun 2021 2:53 AM GMT (Updated: 10 Jun 2021 2:53 AM GMT)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 160 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 23 ஆயிரத்து 539 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19 ஆயிரத்து 654 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது வரை 155 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய பெண், 58 வயதுடைய பெண் மற்றும் 66 வயதுடைய மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதேபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய ஆண் மற்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயதுடைய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதன் மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 160 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை முடிவு நேற்று வெளியானது.
இதில் புதிதாக 302 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 539-ல் இருந்து 23 ஆயிரத்து 841 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 23 ஆயிரத்து 539 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19 ஆயிரத்து 654 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது வரை 155 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய பெண், 58 வயதுடைய பெண் மற்றும் 66 வயதுடைய மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதேபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய ஆண் மற்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயதுடைய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதன் மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 160 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை முடிவு நேற்று வெளியானது.
இதில் புதிதாக 302 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 539-ல் இருந்து 23 ஆயிரத்து 841 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X