search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆந்திராவில் இருந்து சென்னைக்குமது கடத்திய 3 பேர் கைது

    ஆந்திராவில் இருந்து சென்னைக்குமது கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் கூட்டுசாலையில் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து அந்த வழியாக சென்னை செங்குன்றம் நோக்கி சென்ற சந்தேகத்திற்கு இடமான 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். மேற்கண்ட 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேர், 190 மதுபாட்டில்களை கடத்த முயன்றது தெரியவந்தது.

    இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஞ்செட்டியை சேர்ந்த கார்த்திக் (வயது 30), செங்குன்றத்தை சேர்ந்த நந்தகுமார் (21) மற்றும் கிஷோர் (21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களையும் போலீசார் கைப்பற்றினர்.
    Next Story
    ×