search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி

    கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 307 பேர் நேற்று குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர்.
    கரூர்:

    தமிழகத்தில், முழு ஊரடங்கு மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கரூர் மாவட்டத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

    அந்தவகையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவால் 281 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழக சுகாதார துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி நேற்று 195 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அதிகாரிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    மேலும், கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 307 பேர் நேற்று குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் `டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர்.
    Next Story
    ×