search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

    கோவை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை சூலூர் வேடப்ப நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ். கூலித்தொழிலாளி. இவரது மகள் சரண்யா(21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சரண்யாவும், அவரது உறவினர் ஒருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் கடந்த சில நாட்களாகவே சரண்யா மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித் து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×