search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கடலில் சங்கு குளித்த மீனவர் மூச்சு திணறி பலி

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சங்கு சேகரிக்க கடலில் மூழ்கிய மீனவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த இளஞ்சிங்கம் மகன் சமயக்குமார் (வயது30). மீனவரான இவர், சங்கு குளிக்கும் தொழில் செய்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த மீனவர்களுடன் சங்கு குளிக்க சென்றார்.

    முள்ளிமுனை அருகே சுமார் 10 கடல் மைல் தொலைவில் சங்கு சேகரிக்க கடலில் மூழ்கிய சமயக்குமார் நீண்ட நேரம் ஆகியும் மேலே வரவில்லை.

    இதனால் பதட்டமடைந்த சங்கு குளித்துக்கொண்டிருந்த சக மீனவர்கள் உடனடியாக கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடலோர காவல் படையினர் விரைந்து வந்து கடலில் மூழ்கிய சமயகுமாரை சடலமாக மீட்டனர். இது குறித்து கடலோர காவல் படை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×