என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வங்கி மற்றும் நியாயவிலைக் கடைகளில் அலைமோதிய கூட்டம்- கொரோனா தொற்று பரவும் அபாயம்
காரமடை:
கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறப் பகுதிகளில் அவ்வப்போது 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காளம்பாளையம் ஊராட்சி பகுதியான தாயனூரில் வங்கி, ரேஷன் கடைகள், இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக இங்கு கூட்டம் குறைவாக இருந்தது.
நேற்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ஏராளமான மக்கள் பண பரிவர்த்தனைக்காக வங்கிக்கும், ரேஷன் பொருட்களை வாங்க ரேஷன் கடைகளுக்கும் ஏராளமான பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர்.
அவர்கள் கடைகளில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் நின்றிருந்தனர். தற்போது மாவட்டத்தில் தொற்று குறைந்து வரும் வேளையில் இதன் காரணமாக மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்