என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்8 Jun 2021 1:58 PM GMT (Updated: 8 Jun 2021 1:58 PM GMT)
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் மது பாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி மனோகரன், ஜெயக்குமார் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று 5-வது நடைமேடையில் பெங்களூரு-சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்றது. அதில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் போலீசார் சோதனை செய்தனர். அதில் பயணம் செய்த 2 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.
இருவரும் பெங்களூரு பானல்சங்கரி பகுதியைச் சேர்ந்த குமாரசாமியின் மகன் பிரபு (வயது 37), வேலூர் பள்ளகொள்ளை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயவேலுவின் மகன் விஸ்வநாதன் (24) எனத் தெரிய வந்தது. இருவரும் கர்நாடக மாநில மதுபானப் மதுபாட்டில்களை காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தியதாக கூறினர்.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 100 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, திருப்பத்தூர் மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X