search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியாய விலைக்கடை.
    X
    நியாய விலைக்கடை.

    நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுகோள்

    திருப்பூர் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்துகண்ணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் தற்போது வரையில் 7 நியாய விலைக்கடை ஊழியர்கள் பலியாகி உள்ளனர்.தற்போது அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரணப்பொருட்கள் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படுவதால் நாள்தோறும் 200 பேர் கடைகளுக்கு வந்து செல்கின்றனர். எனவே நியாயவிலை கடை ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×