என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு வழங்கும் பொதுமக்கள்
Byமாலை மலர்8 Jun 2021 9:52 AM GMT (Updated: 8 Jun 2021 12:28 PM GMT)
திருப்பூரில் ஒரு வீதி மக்கள் இணைந்து தினமும் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் காங்கேயம் சாலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் தனபாக்கியம் . இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ தனது தெருவில் உள்ள மக்களுடன் சேர்ந்து உணவு வழங்க முடிவெடுத்தார். அதன்படி வேலைக்கு செல்ல முடியாமல் வறுமையில் வாடும் அப்பகுதி மக்களை இணைத்து வீதியின் ஒரு இடத்தில் உணவு தயார் செய்து அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் உணவு வழங்கி வருகிறார்.
மேலும் தயாரிக்கப்பட்ட உணவை பார்சல் செய்து திருப்பூர் அரசு மருத்துவமனை, ஈஸ்வரன் கோவில் வீதி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் என தினமும் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். இந்த பணியில் அப்பகுதியில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு உணவுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தினமும் வெவ்வேறு விதமான உணவுகளை தயார் செய்து வழங்கி வருவதாகவும், இந்த தகவல் அறிந்து பலர் தங்களுக்கு உதவிகள் செய்வதாகவும் தெரிவித்தனர். தினமும் 2500 ரூபாய் செலவு ஆனாலும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருவது மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X