என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆனைமலையில் கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது
கோவை:
ஆனைமலை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆனைமலை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது 5 பேர் கொண்ட கும்பல் நின்று இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கும் இங்கும் அலை மோதினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்த தெரியவந்தது. மேலும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்ய அங்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது.
போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆனைமலையை சேர்ந்த சந்து முகமது (வயது 30), கோகுலகிருஷ்ணன் (24), பொள்ளாச்சியை சேர்ந்த சரவணக்குமார் (26), பிரபாகரன் (35) மற்றும் பிரகாஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் பணம் 5500-யை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்