என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொடைக்கானலில் குடை மிளகாய் விளைச்சல் அதிகரித்தும் விலை வீழ்ச்சி- விவசாயிகள் கவலை
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை பகுதியான கவுஞ்சி கிராமத்தில் முதன் முறையாக சுரேந்தர் என்ற விவசாயி சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் பாலித்தீன் கூடாரங்கள் அமைத்து குடை மிளகாய் விவசாயம் செய்துள்ளார்.
குடை மிளகாய்கள் அதிகப்படியான நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு மற்றும் போக்குவரத்து தடை காரணமாக பெரு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளது.
மேலும் பெரும்பாலான நட்சத்திர உணவு விடுதிகள் திறக்காத காரணத்தால் குடை மிளகாய்கள் அறுவடை செய்யாமல் செடிகளிலேயே விட்டுள்ளனர். மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிலோ ஒன்றிற்கு ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையான குடை மிளகாய் தற்போது 5 ரூபாய்க்கு கூட வாங்கிச் செல்வதற்கு ஆட்கள் இல்லை என அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
எனவே தோட்டக் கலைத்துறையினர் கவனம் செலுத்தி உரிய இழப்பீடாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனவும் மேல்மலைக் கிராமங்களில் குடை மிளகாய் விவசாய உற்பத்தியை அதிகமான அளவில் விவசாயிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்