என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டிலேயே இருங்கள் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை வேண்டுகோள்
Byமாலை மலர்8 Jun 2021 5:55 AM GMT (Updated: 8 Jun 2021 5:55 AM GMT)
திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று தலைதூக்காமல் தடுக்க ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே இருக்க வேண்டுமென பொதுமக்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் கடந்த மாத நிலவரப்படி 24 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். மாவட்டத்தின் மொத்த பாதிப்பில் இது 48 சதவீதம். அடுத்ததாக ஊராட்சி பகுதிகளில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் (26 சதவீதம்) பாதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சியில் 20 சதவீதம் பேரும், பேரூராட்சிகளில் 6 சதவீதம் பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி கிராம ஊராட்சிகளில் -62, மாநகராட்சி -36, பேரூராட்சி -14, நகராட்சியில்9 என 121 இடங்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது தொற்று பாதிப்பு கடந்த 10 நாட்களாக குறைந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தொற்று பாதிப்பு தலை தூக்காமல் தடுக்க வேண்டும்.அதற்கு ஊரடங்கு விதிமுறைகளை மதித்து வீட்டில் இருந்து வெளியே வராமல் மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X