search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

    தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் தொற்று கண்டறியபடுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் மேலும் 341 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 2,932 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 365 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 2,903 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 145 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×