search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்பனா சாவ்லா
    X
    கல்பனா சாவ்லா

    கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்

    கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில், துணிவு மற்றும் வீர, தீர, சாகச செயல்புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா  விருது ரூ.5 லட்சம் காசோலை முதல்வரால் வழங்கப்படுகிறது.அந்த விருது பெற தற்போது  தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருது பெற விரும்புவோர்  awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்யலாம். மேலும் ‘அரசு செயலர், பொதுத்துறை, தலைமை செயலகம், சென்னை 600009,’ என்ற முகவரிக்கு வரும் 30-ந் தேதிக்கு முன் தங்கள் சுய விவரங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும் .விருது பெற தகுதியானவர்கள்அரசால் நியமிக்கப்படும் குழுவினரால் தேர்வு செய்யப்படுவர்.

    மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள விளையாட்டுத்துறை மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் உதவியையும் நாடலாம்என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×