என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பெண் பலி
Byமாலை மலர்7 Jun 2021 3:47 AM GMT (Updated: 7 Jun 2021 3:47 AM GMT)
திண்டுக்கல்லை சேர்ந்த ஆண் ஒருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று உயிரிழந்து இருந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மதுரை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி இருக்கிறது. இது போல் தினமும் 400-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து குணமடையும் நோயாளிகளை குறிவைத்து தாக்கும் கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் தமிழகத்தில் பரவலாக பரவி வருகிறது. இதற்கு தமிழக அரசு உரிய வழிகாட்டு தலின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரையை பொறுத்தமட்டில் 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 60 பேர் அறிகுறி களுடன் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் போடிநாயக்கனூரை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.
ஏற்கனவே, திண்டுக்கல்லை சேர்ந்த ஆண் ஒருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று உயிரிழந்து இருந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி இருக்கிறது. இது போல் தினமும் 400-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து குணமடையும் நோயாளிகளை குறிவைத்து தாக்கும் கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் தமிழகத்தில் பரவலாக பரவி வருகிறது. இதற்கு தமிழக அரசு உரிய வழிகாட்டு தலின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரையை பொறுத்தமட்டில் 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 60 பேர் அறிகுறி களுடன் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் போடிநாயக்கனூரை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.
ஏற்கனவே, திண்டுக்கல்லை சேர்ந்த ஆண் ஒருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று உயிரிழந்து இருந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X