search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழகத்துக்கு 3 ரெயில்களில் 354.92 டன் ஆக்சிஜன் - தெற்கு ரெயில்வே தகவல்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்த நிலையில், தமிழக அரசு வெளிமாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் ஆக்சிஜனை தமிழகத்துக்கு வினியோகம் செய்து வருகிறது.
    சென்னை:

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்த நிலையில், தமிழக அரசு வெளிமாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் ஆக்சிஜனை தமிழகத்துக்கு வினியோகம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 14-ந்தேதி முதல் தமிழகத்துக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இந்தநிலையில், நேற்று 3 ரெயில்களில் 354.92 டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. அதன்படி, 47-வது ரெயில் துர்காபூரில் இருந்து துறைமுகத்துக்கும், 48-வது ரெயில் ஒடிசா மாநிலம் ரூக்கேலாவில் இருந்து சென்னை தண்டையார்பேட்டைக்கும் வந்தது. அதேபோல் 49-வது ரெயில் நேற்று மதியம் 2.25 மணிக்கு ராய்பூரில் இருந்து தண்டையார்பேட்டை பணிமனைக்கு வந்தது. அதில் கொண்டு வரப்பட்ட ஆக்சிஜன்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்பட்டது.

    அந்த வகையில் தமிழகத்துக்கு இதுவரை 3,315.69 டன் ஆக்சிஜன், ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    Next Story
    ×