search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கருமத்தம்பட்டி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

    கருமத்தம்பட்டி அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருமத்தம்பட்டி:

    கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூர் அடுத்த பூளக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (35) மற்றும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (26). இவர்கள் இருவரும் சோமனூர் அடுத்த எலச்சிபாளையம் காட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக அப்பகுதி பொதுமக்கள் நேற்று கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.அவர்களிடம் இருந்த 3 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

    Next Story
    ×