search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோவையில் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

    கோவை மாநகர் சட்டம் ஒழுங்கு துணை கமி‌ஷனராக பணிபுரிந்து வந்தவர் ஸ்டாலின். இவர் மதுரை நகர தலைமையிட துணை கமி‌ஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

    கோவை:

    தமிழகம் முழுவதும் நேற்று 46 எஸ்.பி.க்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் கோவை மாநகரில் மாற்றப்பட்ட போலீஸ் அதிகாரிகள் விவரம் வருமாறு:-

    கோவை மாநகர் சட்டம் ஒழுங்கு துணை கமி‌ஷனராக பணிபுரிந்து வந்தவர் ஸ்டாலின். இவர் மதுரை நகர தலைமையிட துணை கமி‌ஷனராக மாற்றப்பட்டுள்ளார். 

    கோவை நகர தலைமையிட துணை கமி‌ஷனராக பணிபுரிந்து வந்தவர் ஜெயச்சந்திரன், கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். போலீஸ் அகாடமி நிர்வாக எஸ்.பி செல்வராஜ் கோவை நகர தலைமையிட துணை கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். 

    கோவை போக்குவரத்து துணை கமி‌ஷனராக இருந்த முத்தரசு, திருச்சி நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை கமி‌ஷனராக மாற்றப்பட்டுள்ளார். பூந்தமல்லி பட்டாலியன் எஸ்.பி செந்தில்குமார், கோவை போக்குவரத்து துணை கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். 

    இவ்வாறு தமிழக உள்துறை செயலாளர் எஸ்.கே பிரபாகர் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×