search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    மத்தியபிரதேசம் முதல் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிவரை (1.5 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    07.06.2021, 08.06.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

    மழை

    09.06.2021, 10.06.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

    கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்): 
    திருமயம்  (புதுக்கோட்டை) 19, லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 9, பள்ளிப்பட்டு  (திருவள்ளூர்), பந்தலூர்  (நீலகிரி)  தலா 8, தொழுதூர்  (கடலூர்),  நெய்வேலி (கடலூர்), சோத்துப்பாறை (தேனி), நாவலூர்  கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி)  தலா 7, பெரியாறு (தேனி), காட்பாடி (வேலூர் ), மண்ணூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) தலா 6 , எறையூர் (பெரம்பலூர்), திருவையாறு  (தஞ்சாவூர்), செஞ்சி (விழுப்புரம்), கிருஷ்ணகிரி, மோகனுர்  (நாமக்கல்) தலா 5 .

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:-

    08.06.2021: மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

    09.06.2021,10.06.2021 : மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

    இதனால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    குறிப்பு: தென் மேற்கு பருவமழை இன்று தமிழ்நாட்டின் அநேக மாவட்டங்களில் முன்னேறியுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×