search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் 3 பேர் பாலியல் புகார்

    தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
    சென்னை: 

    தடகள பயிற்சியாளர் நாகராஜன் விளையாட்டு பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு அளித்ததாக விளையாட்டு  வீராங்கனை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 29ஆம் தேதி நாகராஜன் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

    தற்போது சிறையில் அடைக்கப்பட்ட நாகராஜனை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று விளையாட்டு வீராங்கனைகள் தங்களுக்கும் விளையாட்டு பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளனர்.
    Next Story
    ×