என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாப்பாரப்பட்டி அருகே சூதாடிய 5 பேர் கைது
Byமாலை மலர்5 Jun 2021 4:20 PM GMT (Updated: 5 Jun 2021 4:20 PM GMT)
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பள்ளிப்பட்டி கிராமத்தில் மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடுவதாக பாப்பாரப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பாப்பாரப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பள்ளிப்பட்டி கிராமத்தில் மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடுவதாக பாப்பாரப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் சூதாடியவர்கள் தப்பி ஓடினர். இதில் 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பள்ளிப்பட்டியை சேர்ந்த சேட்டு, வேலம்பட்டியை சேர்ந்த கீர்த்தி, கோவிந்தராஜ், அருண்குமார், தட்டாரப்பட்டியை சேர்ந்த விஜயன் ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.29,700-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X