search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    சிப்காட் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

    சிப்காட் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிப்காட் (ராணிப்பேட்டை):

    ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள சத்திரம் புதூர் பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 45), விவசாயி. இவர் நேற்று ஈரக்கையுடன் தன் வீட்டில் உள்ள மின்சார சுவிட்சை போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.உடனடியாக அவரை குடும்பத்தினர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×