search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலோசனை நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
    X
    ஆலோசனை நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    பிளஸ்2 பொதுத்தேர்வை நடத்த திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு

    சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் அறிவிக்க உள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் தமிழக அரசு கருத்து கேட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். 

    இதையடுத்து பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் இன்று காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். 

    ஆலோசனையில் பங்கேற்ற தலைவர்கள்

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, பா.ஜனதா சார்பில் நயினார் நாகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பாலாஜி உட்பட 13 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    இதில், பிளஸ்2 பொதுத்தேர்வை நடத்த திமுக, காங்கிரஸ், விசிக, மமக, மதிமுக, கொ.ம.தே.க, தமிழக வாழ்வுரிமை கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பாஜக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பெரும்பான்மை கட்சிகளின் நிலைப்பாடே தங்களின் நிலைப்பாடு என அதிமுக கூறி உள்ளது.

    இந்த கருத்துக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் தான் அறிவிப்பார் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
    Next Story
    ×