என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே 22 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு
Byமாலை மலர்5 Jun 2021 10:04 AM GMT (Updated: 5 Jun 2021 10:04 AM GMT)
திண்டுக்கல் அருகே கிடையில் அடைக்கப்பட்டு இருந்த 22 செம்மறி ஆட்டுக்குட்டிகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் முத்துச்செல்வம். இவர் தனக்கு சொந்தமான 143 செம்மறி ஆடுகள், 22 ஆட்டுக்குட்டிகளுடன் திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன்கோட்டை குஞ்சனம்பட்டி பகுதியில் கிடை அமைத்து பராமரித்து வந்தார்.
இந்நிலையில் கிடையில் அடைக்கப்பட்டு இருந்த 22 ஆட்டுக்குட்டிகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து இறந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த முத்துச்செல்வம் இது குறித்து கால்நடை மருந்தக உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முருகன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் விஜயகுமார், திண்டுக்கல் உதவி இயக்குனர் ஆறுமுக ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து இணை இயக்குனர் முருகன் தெரிவிக்கையில், குஞ்சனம்பட்டி பகுதியில் 2 கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்த 22 ஆட்டுக்குட்டிகள் மட்டும் உயிரிழந்துள்ளன. இறந்த ஆட்டுக்குட்டிகளை பிரேத பரிசோதனை செய்ததில் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை.
ஆனாலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக சென்னையில் உள்ள மத்திய பல்கலைக்கழக ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதிக வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக ஆட்டுக்குட்டிகள் இறந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதனால் மற்ற ஆடுகளை காற்றோட்டமான பகுதியில் அடைக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X