என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி, துறையூர், துவரங்குறிச்சியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
Byமாலை மலர்5 Jun 2021 2:58 AM GMT (Updated: 5 Jun 2021 2:58 AM GMT)
தா.பேட்டை பகுதிகளில் நேற்று முன்தினம் வெயில் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
துறையூர்:
திருச்சி, துறையூர், துவரங்குறிச்சி, தா.பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை அதிக வெப்ப சலனம் காணப்பட்டது. இந்தநிலையில் மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னர் திடீரென்று பச்சைமலையில் மழை பெய்தது. அதனை தொடர்ந்து துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதுபோல் நேற்று இரவு திருச்சி மாநகரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதுபோல் லால்குடியில் நேற்று மாலை 3 மணி நேரம் மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் துறையூரை அடுத்துள்ள அம்மாபட்டி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி செழியன் என்பவர் கூரை கொட்டகை பலத்த காற்றினால் கீழே சாய்ந்தது.
இதேபோன்று துறையூரை அடுத்துள்ள பெரமங்கலம், குருவிக்காரன் குளம், காட்டுக்குளம், ஆகிய கிராமங்களில் சூறைக் காற்று வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இரவு முழுவதும் சாரல் மழை பெய்த வண்ணமாக இருந்தது.
துவரங்குறிச்சி பகுதிகளிலும் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது செவந்தாம்பட்டி கிராமத்தில் பழனிச்சாமி (வயது 45) என்பவரின் பசு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது, மின்னல் தாக்கி பரிதாபமாக செத்தது. அது 6 மாதம் சினையாக இருந்தது. இதை அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் கால்நடை துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பேட்டை பகுதிகளில் நேற்று முன்தினம் வெயில் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் தா.பேட்டை மற்றும் சுற்றி உள்ள பகுதியில் நள்ளிரவில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது.
திருச்சி, துறையூர், துவரங்குறிச்சி, தா.பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை அதிக வெப்ப சலனம் காணப்பட்டது. இந்தநிலையில் மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னர் திடீரென்று பச்சைமலையில் மழை பெய்தது. அதனை தொடர்ந்து துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதுபோல் நேற்று இரவு திருச்சி மாநகரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதுபோல் லால்குடியில் நேற்று மாலை 3 மணி நேரம் மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் துறையூரை அடுத்துள்ள அம்மாபட்டி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி செழியன் என்பவர் கூரை கொட்டகை பலத்த காற்றினால் கீழே சாய்ந்தது.
இதேபோன்று துறையூரை அடுத்துள்ள பெரமங்கலம், குருவிக்காரன் குளம், காட்டுக்குளம், ஆகிய கிராமங்களில் சூறைக் காற்று வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இரவு முழுவதும் சாரல் மழை பெய்த வண்ணமாக இருந்தது.
துவரங்குறிச்சி பகுதிகளிலும் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது செவந்தாம்பட்டி கிராமத்தில் பழனிச்சாமி (வயது 45) என்பவரின் பசு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது, மின்னல் தாக்கி பரிதாபமாக செத்தது. அது 6 மாதம் சினையாக இருந்தது. இதை அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் கால்நடை துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பேட்டை பகுதிகளில் நேற்று முன்தினம் வெயில் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் தா.பேட்டை மற்றும் சுற்றி உள்ள பகுதியில் நள்ளிரவில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X