search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த ஆட்டோ டிரைவர் பலி

    மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த ஆட்டோ டிரைவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் கூடை வெட்டியான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது39). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 30-ந் தேதி இரவு திருப்பத்தூர் அடுத்த அனேரி கிராமம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீடு திரும்பினார். தாமலேரி முத்தூர் மேம்பாலம் அருகே வந்தபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தவறி விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×