என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீவலப்பேரியில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல்- 5 பேர் கைது
Byமாலை மலர்4 Jun 2021 9:25 AM GMT (Updated: 4 Jun 2021 9:25 AM GMT)
நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக வாலிபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
சீவலப்பேரி அருகே உள்ள பொட்டல் நகரை சேர்ந்தவர் வேல் சுடலை (வயது 18). இவர் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று இரவு இவர் சாப்பாடு வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது சீவலப்பேரி அருகே உள்ள தனுஷ்கோடி என்பவரது வீட்டருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். இதனால் தனுஷ்கோடி மனைவி ராமலட்சுமி, எதற்காக இங்கு நிற்கிறாய் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ராமலட்சுமியின் உறவினர்கள் மகேஷ் (19) மற்றும் 4 சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து வேல் சுடலையை சரமாரியாக அடித்து, உதைத்து தாக்கினார்கள்.
இதில் காயம் அடைந்த வேல் சுடலை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் டி.எஸ்.பி. அர்ச்சனா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மகேஷ் மற்றும் 4 சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதேபோல் சீவலப்பேரியை சேர்ந்த ராமலட்சுமி (38) என்பவரும் சீவலப்பேரி போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் மாணவர் வேல் சுடலை மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X