search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    போடி அருகே சிறுமியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

    போடி அருகே சிறுமியை கடத்தி கர்ப்பிணியாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கீழசொக்கநாதபுரம் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் கோபி (வயது 29). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-2 மாணவியுடன் கடந்த 2 வருடங்களாக பழகி வந்தார்.

    இந்நிலையில் மாணவியை கோபி கேரளாவுக்கு கடத்திச் சென்றார். தனது மகளை காணாமல் அவரது தந்தை போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் கோபியையும், மாணவியையும் மீட்டு வந்தனர்.

    விசாரணையில் மாணவியை காதலிப்பதாக கூறி 5 மாத கர்ப்பிணியாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து கோபியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவியை தேனியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியை சேர்ந்த 51 வயது திராட்சை தோட்ட தொழிலாளி தனது 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து போலீசார் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×