என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
போடி அருகே சிறுமியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கீழசொக்கநாதபுரம் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் கோபி (வயது 29). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-2 மாணவியுடன் கடந்த 2 வருடங்களாக பழகி வந்தார்.
இந்நிலையில் மாணவியை கோபி கேரளாவுக்கு கடத்திச் சென்றார். தனது மகளை காணாமல் அவரது தந்தை போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் கோபியையும், மாணவியையும் மீட்டு வந்தனர்.
விசாரணையில் மாணவியை காதலிப்பதாக கூறி 5 மாத கர்ப்பிணியாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து கோபியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவியை தேனியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியை சேர்ந்த 51 வயது திராட்சை தோட்ட தொழிலாளி தனது 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீசார் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்