என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசிகலா அதிமுகவில் இல்லை- எடப்பாடி பழனிசாமி பேட்டி
Byமாலை மலர்4 Jun 2021 8:45 AM GMT (Updated: 4 Jun 2021 8:45 AM GMT)
சசிகலா அமமுக தொண்டர்களுடன் தான் பேசி வருகிறார். அதிமுக தொண்டர்களுடன் பேசவில்லை.
சென்னை:
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றபின் முதல்முறையாக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
9 மாவட்ட செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை நிறைவடைந்த நிலையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது அதிமுக.
* கோதாவரி-காவிரி திட்டம் குறித்து ஆந்திர அரசுடன் அப்போதைய அமைச்சர்கள் பேசினார்கள்.
* கோதாவரி-காவிரி திட்டத்தை பரிசீலிப்பதாக ஆந்திர அரசு உறுதி அளித்துள்ளது.
* ஏற்கனவே பிரதமரை சந்தித்தபோது கோதாவரி-காவிரி திட்டம் குறித்து பேசினேன்.
* கோதாவரி-காவிரி திட்டம் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்ட செய்தியால் மகிழ்ச்சி அடைந்தேன்.
* கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
* கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும்.
* கொரோனா பரிசோதனை முடிவை தாமதமாக அறிவிக்கக்கூடாது. பரிசோதனை முடிவை உடனே தெரிவித்தால் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
* சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை. சசிகலா அதிமுகவில் இல்லை. அரசியலில் இருந்து விலகியதாக ஊடங்கங்கள் மூலம் சசிகலா அறிவிப்பு வெளியிட்டார்.
* மக்கள் அழைக்கும் மத்திய அரசு என்ற பெயரே தொடர வேண்டும்.
* அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கருத்து வேறுபாடு இல்லை.
* அதிமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றபின் முதல்முறையாக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
9 மாவட்ட செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை நிறைவடைந்த நிலையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது அதிமுக.
* கோதாவரி-காவிரி திட்டம் குறித்து ஆந்திர அரசுடன் அப்போதைய அமைச்சர்கள் பேசினார்கள்.
* கோதாவரி-காவிரி திட்டத்தை பரிசீலிப்பதாக ஆந்திர அரசு உறுதி அளித்துள்ளது.
* ஏற்கனவே பிரதமரை சந்தித்தபோது கோதாவரி-காவிரி திட்டம் குறித்து பேசினேன்.
* கோதாவரி-காவிரி திட்டம் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்ட செய்தியால் மகிழ்ச்சி அடைந்தேன்.
* கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
* கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும்.
* கொரோனா பரிசோதனை முடிவை தாமதமாக அறிவிக்கக்கூடாது. பரிசோதனை முடிவை உடனே தெரிவித்தால் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
* கொரோனா தடுப்பூசி தமிழகத்திற்கு கூடுதலாக வழங்க வலியுறுத்துவோம்.
* சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை. சசிகலா அதிமுகவில் இல்லை. அரசியலில் இருந்து விலகியதாக ஊடங்கங்கள் மூலம் சசிகலா அறிவிப்பு வெளியிட்டார்.
* அமமுக தொண்டர்களுடன் தான் சசிகலா பேசி வருகிறார். அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசவில்லை. சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இதையும் படியுங்கள்... ஆதரவாளர்களிடம் தொடர்ந்து போனில் பேசும் சசிகலா
* மக்கள் அழைக்கும் மத்திய அரசு என்ற பெயரே தொடர வேண்டும்.
* அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கருத்து வேறுபாடு இல்லை.
* அதிமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X