search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    சசிகலா அதிமுகவில் இல்லை- எடப்பாடி பழனிசாமி பேட்டி

    சசிகலா அமமுக தொண்டர்களுடன் தான் பேசி வருகிறார். அதிமுக தொண்டர்களுடன் பேசவில்லை.
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றபின் முதல்முறையாக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    9 மாவட்ட செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை நிறைவடைந்த நிலையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது அதிமுக.

    * கோதாவரி-காவிரி திட்டம் குறித்து ஆந்திர அரசுடன் அப்போதைய அமைச்சர்கள் பேசினார்கள்.

    * கோதாவரி-காவிரி திட்டத்தை பரிசீலிப்பதாக ஆந்திர அரசு உறுதி அளித்துள்ளது.

    * ஏற்கனவே பிரதமரை சந்தித்தபோது கோதாவரி-காவிரி திட்டம் குறித்து பேசினேன்.

    * கோதாவரி-காவிரி திட்டம் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்ட செய்தியால் மகிழ்ச்சி அடைந்தேன்.

    * கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    * கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும்.

    * கொரோனா பரிசோதனை முடிவை தாமதமாக அறிவிக்கக்கூடாது. பரிசோதனை முடிவை உடனே தெரிவித்தால் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

    * கொரோனா தடுப்பூசி தமிழகத்திற்கு கூடுதலாக வழங்க வலியுறுத்துவோம்.

    சசிகலா

    * சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை. சசிகலா அதிமுகவில் இல்லை. அரசியலில் இருந்து விலகியதாக ஊடங்கங்கள் மூலம் சசிகலா அறிவிப்பு வெளியிட்டார்.
     
    * அமமுக தொண்டர்களுடன் தான் சசிகலா பேசி வருகிறார். அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசவில்லை. சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.


    * மக்கள் அழைக்கும் மத்திய அரசு என்ற பெயரே தொடர வேண்டும்.

    * அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கருத்து வேறுபாடு இல்லை.

    * அதிமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×