என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாராபுரத்தில் பலத்த மழை-பொதுமக்கள் மகிழ்ச்சி
Byமாலை மலர்4 Jun 2021 8:02 AM GMT (Updated: 4 Jun 2021 1:22 PM GMT)
தாராபுரத்தில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்தது. நேற்று மாலை தாராபுரம் பகுதியில் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
அதன்பிறகு இன்று அதிகாலை 2மணியில் இருந்து காலை 5மணி வரை லேசான தூரலுடன் மழை தூறிக்கொண்டிருந்த நிலையில் காலை 6மணிக்கு பிறகு பலத்த மழையாக பெய்தது. மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் தாராபுரம் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும் பகலில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X