search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மளிகை கடைக்கு  சீல் வைக்கப்பட்ட காட்சி.
    X
    மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்ட காட்சி.

    ரூ.8க்கு முட்டை விற்பனை-மளிகை கடைக்கு சீல்வைப்பு

    திருப்பூரில் பால் விற்பதாக கூறி, மளிகை பொருட்களை பேக்கிக் செய்து விற்ற மளிகை கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் ஒரு முட்டையை ரூ.8க்கு விற்றதும் தெரியவந்தது.
    திருப்பூர்:

    திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். அப்பகுதியில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார். ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பால் விற்பனை செய்வதாக கூறி கூடுதல் விலைக்கு மளிகை பொருட்களை ‘பேக்கிங்’ செய்து விற்பதாக அப்பகுதி மக்கள்  புகார் தெரிவித்தனர்.

    சம்பவத்தன்று  கடைக்கு சென்ற ஒருவர் முட்டை வாங்கியுள்ளார். அப்போது ஒரு முட்டையின் விலை ரூ.8  என்று கூறியதால் அதிர்ச்சியடைந்த அவர் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

    இதையடுத்து நல்லூர் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள்  கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது 3பேர் பொருட்களை ‘பேக்கிங்’ செய்துகொண்டிருந்தனர். 

    மேலும்  பால் பொருட்களை விற்பதாக கூறி கூடுதல் விலைக்கு மளிகை பொருட்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    Next Story
    ×