search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    மேட்டூர் அணை நீர் திறப்பால் 8 மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

    மேட்டூர் அணை

    காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

    தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் - 97.13 அடியாக உள்ளது. நீர் இருப்பு 61.43 டிஎம்சியாக உள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×