search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கரூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

    கரூரில் செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கரூர்:

    கரூர் தாந்தோணிமலை முத்தலாடம்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்தன். இவருடைய மகன் ஆஷிக் (வயது 19). இவர் தாந்தோணிமலையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

    தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்த ஆஷிக் செல்போனில் அதிக நேரம் கேம் விளையாடி கொண்டிருந்தார். இதனால் ஆஷிக்கை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஆஷிக் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ஆஷிக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×