search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வனிதா
    X
    வனிதா

    திருப்பூரின் முதல் பெண் போலீஸ் கமிஷனராக வனிதா நியமனம்

    திருப்பூர் மாநகர முதல் பெண் போலீஸ் கமிஷனராக வனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய  கார்த்திக்கேயன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி.யாக பணிமாற்றம் செய்யப் பட்டுள்ளார். இதையடுத்து சென்னை  ரெயில்வே ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த வனிதா திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் வனிதா திருப்பூரின் முதல் பெண் போலீஸ் கமிஷனர் என்ற பெருமையை பெற்றுள்ளார். திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வந்த திஷாமிட்டல் சென்னை மயிலாப்பூர்  சரக துணை கமிஷனராக  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் எஸ்.பி., பணியிடம் தற்போது காலியாக  உள்ளது.
    Next Story
    ×