search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்சிஜன் செறிவூட்டிகள்
    X
    ஆக்சிஜன் செறிவூட்டிகள்

    அரசு ஆஸ்பத்திரிகளுக்குரூ.25 லட்சத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்- முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்கினார்

    குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
    பள்ளிபாளையம்:

    குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தனது சொந்த செலவில் ரூ.25 லட்சம் மதிப்பிலான 24 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கலெக்டரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம், பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவணன், அதிகாரி நகுல்சாமி, எலந்தகுட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரேவதி, குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பாரதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில், நகராட்சி முன்னாள் துணை தலைவர் சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெய்கணேஷ், கண்ணையன், அ.தி.மு.க. நிர்வாகிகள் வைத்தியலிங்கம், சிவகுமார் மற்றும் கொக்கராயன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், நர்சுகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×