என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆலாந்துறை அருகே தச்சு தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
கோவை:
கோவை அடுத்த ஆலாந்துறை சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ்( வயது 44). தச்சுத் தொழிலாளி. இவர் அங்குள்ள லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தை காண்ட்ராக்ட் எடுத்து ஆட்களை வைத்து வேலை செய்து வருகிறார். இவரிடம் கடந்த 6 மாதங்களாக சிலர் வேலை செய்து வந்தனர். அதில் 2 வாலிபர்களுக்கு ரூ. 25 ஆயிரம் சம்பள பாக்கி கொடுக்க வேண்டி இருந்ததாக தெரிகிறது. இதனால் அந்த வாலிபர்களுக்கும், நாகராஜுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ஆலாந்துறை லட்சுமி நகர் பகுதியில் நின்றிருந்த நாகராஜிடம் அந்த வாலிபர்கள் தங்களுக்கு தரவேண்டிய சம்பளத்தை தருமாறு கேட்டுள்ளனர்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த 2 வாலிபர்களும் நாகராஜனை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொண்டாமுத்தூர் ஓணாபாளையத்தை சேர்ந்த முகேஷ் (29) மற்றும் கார்த்திக் (21) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்