என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம்- தனியார் வங்கி மேலாளர் தற்கொலை
Byமாலை மலர்1 Jun 2021 10:11 AM GMT (Updated: 1 Jun 2021 10:11 AM GMT)
கோவையில் ஷேர் மார்க்கெட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தனியார் வங்கி மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
மதுரையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32). இவரது மனைவி ஹேமலதா (29). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் குடும்பத்துடன் பொள்ளாச்சி புளியம்பட்டியில் தங்கி தனியார் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வந்தார். மேலும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து வந்தார். அதற்காக ராஜேஷ் தனது நண்பர் ஒருவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. ஆனால் ஷேர் மார்க்கெட்டில் அவருக்கு எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கவில்லை. இதனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
அதனை நினைத்து அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X