என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீசார் அதிரடி சோதனை-3,500 வாகனங்கள் பறிமுதல்
Byமாலை மலர்1 Jun 2021 8:29 AM GMT (Updated: 1 Jun 2021 12:51 PM GMT)
கொரோனா ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 450 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறியது தொடர்பாக கடந்த 24-ந்தேதி முதல் போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி திருப்பூர் மாநகரில் முககவசம் அணியாத ஆயிரத்து 836 பேருக்கு ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாத 27 பேருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெளியில் சுற்றியது தொடர்பாக 900 வழக்குப்பதிவு செய்து 892 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் மாவட்டத்தில் முககவசம் அணியாத 755 பேருக்கு ஒரு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 26 பேருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி சுற்றியது தொடர்பாக 506 வழக்குப்பதிவு செய்து 2 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.2 ஆயிரத்து 558 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X