என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் மெகா சூதாட்டம்- 11 பேர் கைது
Byமாலை மலர்30 May 2021 8:58 AM GMT (Updated: 30 May 2021 8:58 AM GMT)
கோவையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை செட்டிப்பாளையம் போலீசாருக்கு மலுமிச்சம்பட்டி ஜே.ஜே நகர் பகுதியில் உள்ள மெகா சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சாதாரண உடையில் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 5 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து சீட்டாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.2,110-யை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு களிபாளையம் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவல் படி அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2 சேவல் மற்றும் ரூ. 410-யை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X