search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவையில் மெகா சூதாட்டம்- 11 பேர் கைது

    கோவையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    கோவை செட்டிப்பாளையம் போலீசாருக்கு மலுமிச்சம்பட்டி ஜே.ஜே நகர் பகுதியில் உள்ள மெகா சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சாதாரண உடையில் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 5 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து சீட்டாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.2,110-யை பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு களிபாளையம் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவல் படி அங்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2 சேவல் மற்றும் ரூ. 410-யை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×