search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
    X
    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

    போக்குவரத்து வாகன ஆய்வாளர் நேர்முகத்தேர்வு தள்ளிவைப்பு- டிஎன்பிஎஸ்சி

    கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்து வாகன ஆய்வாளர் நேர்முகத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தகவல் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜூன்) 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெற இருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை-2 பணிக்கான நேர்முகத்தேர்வு கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்படுகிறது.

    அதேபோல், ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணிகளில் அடங்கிய, உதவி மின் ஆய்வாளர், உதவி என்ஜினீயர், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் பதவிகளுக்கான கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    அடுத்த மாதம் 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற இருந்த துறை தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகிறது. அதன்படி இந்த தேர்வானது ஆகஸ்டு மாதத்தில் நடைபெறும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×