search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பாவூர்சத்திரத்தில் ஊரடங்கை மீறி திறப்பு : 2 மளிகை கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்

    பாவூர்சத்திரத்தில் 2 மளிகை கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    பாவூர்சத்திரம்:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழுஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில், பாவூர்சத்திரம் வி.ஏ.நகர் பகுதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி 2 மளிகை கடைகளை திறந்து வியாபாரம் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

    இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகுமார், மகளிர் திட்ட உதவி அலுவலர் சங்கரநாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, திலகராஜ், சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் சம்பந்தப்பட்ட அந்த 2 கடைகளுக்கும் சென்று தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    பாவூர்சத்திரம் பகுதியில் இதுபோல் கடைகளை திறந்து வியாபாரம் செய்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்
    Next Story
    ×