என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குளத்தில் 500 குடும்பங்களுக்கு இலவசமாக காய்கறி
Byமாலை மலர்28 May 2021 11:10 AM GMT (Updated: 28 May 2021 11:10 AM GMT)
ஆலங்குளம் காய்கறி வியாபாரிகள் சங்கம் மற்றும் காவல்துறை சார்பில் 500 குடும்பங்களுக்கு இலவச காய்கனி வினியோகம் ராஜீவ் நகர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் காய்கறி வியாபாரிகள் சங்கம் மற்றும் காவல்துறை சார்பில் 500 குடும்பங்களுக்கு இலவச காய்கனி வினியோகம் ராஜீவ் நகர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வளவன் தலைமை தாங்கினார்.
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச காய்கனி வழங்கி தொடங்கி வைத்தார். ராஜீவ் நகர் மற்றும் காமராஜ் நகர் பகுதி பொதுமக்களுக்கு காய்கனி வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கண்மணி, தையல்நாயகி காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரன் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒருநாள் விட்டு ஒருநாள் காவல்துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு, வியாபாரிகள் காய்கனி வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X