search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிராக்டரை ஏற்றி தக்காளி பழங்களை அழிக்கும் விவசாயி.
    X
    டிராக்டரை ஏற்றி தக்காளி பழங்களை அழிக்கும் விவசாயி.

    டிராக்டர் ஏற்றி தக்காளி பழங்களை அழிக்கும் விவசாயிகள்

    உடுமலை பகுதியில் தக்காளி சாகுபடியில் போதிய விலை இல்லாததால் டிராக்டர் மூலம் அழிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டாரபகுதியில்  தக்காளி சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டனர். ஆனால் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகளே டிராக்டர் மூலம் தக்காளி பழங்களை அழிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    ஒரு ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்வதற்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு பிடிக்கிறது. ஒரு ஏக்கரில் 10 டன்னுக்கு மேல் மகசூல் எடுக்க முடியும் என்பதால் லாபகரமான பயிராகவே இருந்துள்ளது. ஆனால் சமீப காலங்களாக சுமார் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.20 முதல் ரூ.50 வரையிலே விற்பனையாகிறது. 

    முழு ஊரடங்கு காலத்தில் வெளியூர்களுக்குத் தக்காளி கொண்டு செல்வதும் தடைபட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட போது மட்டும் ஒரு பெட்டி தக்காளியை ரூ.150 கொடுத்து வியாபாரிகள் விளை நிலத்துக்கே தேடி வந்து வாங்கி சென்றார்கள். 

    ஆனால் எங்கள் கண் முன்னேயே அந்த தக்காளியை சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ.80 என்று பொதுமக்களிடம் விற்பனை செய்யும் கொடுமையும் நடந்தது. இப்படி பெரும்பாலும் இடைத்தரகர்களும் வியாபாரிகளும் மட்டுமே சம்பாதித்து வருகிறார்கள். 

    விவசாயிகளுக்கு போட்ட முதலைக் கூட எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் சாகுபடி செய்துள்ள தக்காளியை முழுமையாக அழித்து விட்டு வேறு பயிர் சாகுபடி செய்யலாம் என்ற நோக்கத்தில் டிராக்டர் மூலம் அழித்து கொண்டிருக்கிறோம் என்றனர். 
    Next Story
    ×