search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஜோலார்பேட்டை பகுதியில் 52 பேருக்கு கொரோனா

    ஜோலார்பேட்டை நகரம் மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றிய அளவில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகரம் மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றிய அளவில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஏலகிரி மலையில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. ஜோலார்பேட்டை வட்டார அளவில் 43 பேர் உள்பட 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை அரசு டாக்டர்கள் புகழேந்தி, முரளி, சுகாதார ஆய்வாளர் கோபி மற்றும் நகராட்சி, ஊராட்சி பணியாளர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று கிருமிநாசினி தெளித்து பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் திருப்பத்தூர் மற்றும் அக்ராவரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×