என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
Byமாலை மலர்26 May 2021 6:23 AM GMT (Updated: 26 May 2021 6:25 AM GMT)
திருப்பூர் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
வெள்ளக்கோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில சின்னமுத்தூர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் தினேஷ்குமார்(வயது 19). வேன் டிரைவர். இவர் 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.பின்னர் இருவரும் கோவைக்கு சென்று பீளமேடு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். அங்கு சிறுமியை சேகர் கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் உறவு வைத்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதையறிந்த தினேஷ்குமார் சிறுமியை அழைத்து வந்து அவரது ஊரில் விட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமி வீட்டிற்கு வந்து நடந்தது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.பின்னர் சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில் சிறுமியின் பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் தினேஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X