search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    பழனியில் இடத்தகராறில் முதியவர் அடித்து கொலை

    பழனி அருகே இடத்தகராறில் முதியவரை அடித்து கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

    பழனி:

    பழனி அருகில் உள்ள எரமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது65). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கதிர்வேல் (55). இவர்கள் 2 பேருக்கும் இடையே வீட்டின் முன்புறம் உள்ள சாக்கடை கால்வாயில் தண்ணீர் செல்வது தொடர்பாகவும், இட பிரச்சனை காரணமாகவும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஆத்திரம் அடைந்த கதிர்வேல் பழனியப்பனை கடுமையாக தாக்கி கீழே தள்ளினார். படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் தூக்கி சென்று பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

    இது குறித்து ஆயக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியப்பனை அடித்து கொன்ற கதிர்வேலை கைது செய்தனர். மேலும் பழனியப்பன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×