என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சென்னை வருகை
Byமாலை மலர்23 May 2021 2:32 PM GMT (Updated: 23 May 2021 3:19 PM GMT)
சென்னை மற்றும் புறநகர் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை கொண்டு வந்துள்ளது.
சென்னை:
கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கான மருத்துவ திரவ ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், வட மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படுகிறது. இதுவரை 11 ரெயில்கள் மூதல் 633 டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று 12-வது ஆக்சிஜன் ரெயில் திருவொற்றியூர் வந்ததடைந்தது. இங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை கொண்டு வந்துள்ளது. இதுவரை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் 703 டன் திரவ மருத்துவ ஆகிஜன் சென்னை வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X